சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டை பெற்ற குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவிருந்த நிலையில், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால்  இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!