முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபருக்கு அதிகாரம் அளிக்க முடிவு! July 16, 2022 7:40 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு தேவையான அதிகாரங்களை வழங்குவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.திருடிச் செல்லப்பட்ட துப்பாக்கிகள் அத்துடன், நாடாளுமன்றம் கூடும் போது அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாகச் சந்திக்கும் உரிமையைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவையில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.அண்மையில் நாடாளுமன்றத்தை கைப்பற்றும் முயற்சியின் போது, இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று, அவர்களின் T-56 துப்பாக்கிகளை தோட்டாக்களுடன் திருடியுள்ளனர். அந்தச் சம்பவத்தில் இராணுவத்தினரிடம் இருந்து திருடப்பட்ட இரண்டு துப்பாக்கிகளையும் தேடுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பாதுகாப்புத் துறைக்கு அதிகாரம் வழங்க அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…