நாட்டில் நிலைமை சீரடைந்துள்ளது! ஜனாதிபதி அறிவிப்பு August 16, 2022 3:56 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest நாட்டில் மீண்டும் நிலைமை சீரடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாட்டில் மீண்டும் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படமாட்டாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இந்த வார இறுதியில் காலாவதியாகவிருந்த அவசரகாலச் சட்டம் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதியுடன் அவசரகாலச் சட்டம் முடிவுக்கு வருகிறது.கடந்த ஜூலை 18 ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் ஜுலை 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.அத்துடன் நாடாளுமன்றம் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனப்படி எதிர்வரும் 18 ஆம் திகதியுடன் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஒரு மாதம் பூர்த்தியாகின்றது.அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் ஒரு மாத காலம் பூர்த்தியாகும் முன்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…