அர்ஜென்டினாவில் பிறந்த குழந்தைகளை விஷ ஊசி போட்டு கொன்ற நர்சு கைது August 22, 2022 10:10 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest அர்ஜென்டினா கார்டோபாவில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளது. இங்கு கடந்த மார்ச் முதல் ஜூன் மாதம் வரை சுமார் 8 குழந்தைகள் பிறந்தது. ஆரோக்கியமாக பிறந்த இந்த குழந்தைகள் அடுத்தடுத்து சில நாட்களில் இறந்தது. கடைசியாக இறந்த குழந்தையின் பாட்டிக்கு திடீரென சந்தேகம் எழுந்தது, இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அந்த குழந்தைகளின் உடலில் பொட்டாசியம் அளவு அதிகமாகி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளன. அந்த குழந்தைகளுக்கு விஷ ஊசி போட்டதால் தான் உடல்நிலை பாதிக்கப்பட்டதும் தெரிந்தது. இது தொடர்பாக ஆஸ்பத்திரி நர்சு பிரெண்டா அகுலேராவை போலீசார் கைது செய்தனர். ஆரோக்கியமாக பிறந்த குழந்தையை அவர் ஏன் விஷ ஊசி போட்டு கொன்றார் என்பது தொடர்பாக தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் உடைகள்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ஈரானில் மூன்று மரண தண்டனையில் இருந்து தப்பிய நபர் சிறையில் பரிதாப மரணம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கனடாவில் உணவுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…