டெனீஸ்வரனிடம் கடன் வாங்கி அசிங்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை!

?????????????
தமிழ் மக்கள் பேரவை கடனாகப் பெற்றிருந்த 2 லட்சம் ரூபா பணத்தில் மீளக் கையளிக்கப்படாதிருந்த ஒரு இலட்சம் ரூபா மீளக் கையளிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.தமிழ் மக்கள் பேரவை எழுக தமிழ் நிகழ்வு ஏற்பாட்டுக்காக 2 லட்சம் ரூபா பணத்தைப் பெற்றிருந்தனர் என்றும், அதில் ஒரு லட்சம் ரூபாவை மீளளித்தனர் என்றும் மிகுதிப் பணத்தை மீளளிக்கவில்லை என்றும் அமைச்சர் பா.டெனீஸ்வரன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அந்தப் பணத்தை மீளக் கையளிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெனீஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.தற்போது அந்தப் பணம் தனது வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!