உனக்கு பழகுவதற்கு இந்து இளைஞர்கள் இல்லையா? – மாணவியின் வாக்குமூலம்

உத்திரபிரதேச மாநிலத்தில் பெண் பொலிஸ் ஒருவர், ‘உனக்கு பழகுவதற்கு இந்து இளைஞர்கள் இல்லையா? எதற்காக முஸ்லீம் இளைஞருடன் பழகுகிறாய்…’ என்று கேள்வி எழுப்பி ஒரு மாணவியை அடித்த வீடியோ சமீபத்தில் வைரலானது. சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து, அந்த பொலிஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கூறியதாவது, “நாங்கள் வீட்டில் படித்துக்கொண்டிருந்தபோது, ‘பஜ்ரங் தள்’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் வீட்டுக்குள் வந்தனர். எங்க இருவரையும் வெளியில் இழுத்து வந்து, நீ ஒரு இந்து மதத்தை சேர்ந்தவள், முஸ்லீம் நபருன் பழகுகிறாயா? நீங்கள் எப்படி திருமணம் செய்துகொள்ள முடியும். உனக்கு வேறு யாரும் கிடைக்கவில்லையா என கேட்டு என்னை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

காவல் நிலையத்தில் வைத்து எனது நண்பர்மீது பாலியல் வன்கொடுமைப் புகார் அளிக்க வற்புறுத்தினர். நானும் எனது பெற்றோரும் மறுத்துவிட்டோம். காவல் துறையினர் ஏன் இவ்வாறு நடந்துகொண்டனர் எனத் தெரியவில்லை என கூறியுள்ளார். தற்போது இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக மீரட் காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!