தலாய் லாமாவை கொலை செய்ய முயன்ற வழக்கில் தலைமறைவாகியிருந்த ஆறு பேர் கைது

திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய் லாமாவை கொலை செய்ய முயன்ற வழக்கில் தலைமறைவாகியிருந்த ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்திய தேசிய புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இவர்களை கர்நாடகாவில் கைதுசெய்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் தலாய்லாமா பிஹாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தவேளை அந்த இடத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து தலாய் லாமாவை கொல்ல முயன்றதாக ஜே.எம்.பி. என்ற அமைப்பின் மீது வழக்கு தொடரப்பட்டதுடன் அந்த அமைப்பை சேர்ந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருந்தன. இந்நிலையில் கர்நாடகாவின் இரகசிய பொலிஸார் ஆறு பேரை கைதுசெய்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!