15 வருட தவத்தின் பின்னர் பெற்ற மகளை பறிகொடுத்த பிரபல இசைக்கலைஞர் தன்னுயிர் நீத்தார்!!!

இந்தியாவைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் பாலபாஸ்கர் கடந்தவாரம் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாலபாஸ்கர் கடந்த வாரம் தனது மனைவி மற்றும் மகள் தேஜஸ்வினியுடன் காரில் சென்றுக் கொண்டிருந்த வேளையில் கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

பாலபாஸ்கருக்கு திருமணம் நடந்து 15 ஆண்டுகள் கடந்தே தேஜஸ்வினி பிறந்தார்.

விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மணித்தியாலத்தில் சிகிச்சை பலனின்றி தேஜஸ்வினி உயிரிழந்தார்.

படுகாயமடைந்த பாலபாஸ்கர் அவரது மனைவி மற்றும் கார் சாரதி தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

மகள் உயிரிழந்தது கூட தெரியாத நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பாலபாஸ்கரும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

தனது 17ஆவது வயதிலேயே வயலின் இசைக்கலைஞராக இசை உலகில் வலம் வந்த பால பாஸ்கர சிறந்த பாடகருமாவார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!