உலகில் முதன் முறையாக கர்ப்பப்பை புற்றுநோய் ஒழிப்பு ; அவுஸ்திரேலியா சாதனை

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் கர்ப்பபை புற்றுநோயை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பபை புற்றுநோய் பெண்களை பெருமளவில் பாதித்து உயிரை பறிக்கிறது. வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளில் குறித்த நோய் பாதித்தவர்களில் 10 பெண்களில் 9 பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்த நோய் ‘எச்.பி.வி.’ (கியூமன்) எனும் வைரஸ்களால் ஏற்படுகிறது. இத்தகைய வைரஸ் 100 விதமாக உள்ளன. அந்த வைரஸ் தாக்கிய பெண்களுக்கு தொடக்கத்தில் நோயின் பாதிப்பு தெரியாது. அதற்கான அறிகுறிகள் தென் படாது. உயிரை பறிக்கும் நிலை ஏற்படும் போதே தெரிய வரும்.

அவுஸ்திரேலியாவை பொறுத்தவரை ஆண்டுக்கு 1 இலட்சம் பெண்கள் கர்ப்பபை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தனர். இது சர்வதேச அளவில் பாதி ஆகும். எனவே இந்த நோயை ஒழிக்க அங்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதைதொடர்ந்து அங்கு கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் கர்ப்பபை புற்றுநோயை ஏற்படுத்தும் ‘எச்.பி.வி’ வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு ஊசி மருந்து பெண் குழந்தைகளுக்கு போடப்பட்டு வருகிறது. தற்போது அது சிறுவர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. கடந்த 1991 ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கஆம் ஆண்டு தான் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது.

‘எச்.பி.வி.’ வைரஸ் தடுப்பு மருந்து பயன்படுத்தப்பட்டு வருவதால் அஸ்திரேலியாவில் தற்போது பெண்களுக்கு கர்ப்பபை புற்றுநோய் தாக்குதல் மிகவும் குறைந்துவிட்டது.

தற்போது 1 இலட்சம் பெண்களில் 6 பேரை மட்டுமே கர்ப்பபை புற்றுநோய் தாக்குகிறது. எனவே எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் அவுஸ்திரேலியாவில் இந்த நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!