டுபாய் நோக்கி புறப்பட்ட விமானம் சுவரில் மோதி விபத்து

திருச்சியிலிருந்து டுபாய் நோக்கி புறப்பட்ட ஏயார் இந்திய விமானம், விமான நிலைய சுற்றுச் சுவரில் மோதி விபத்துக்குள்ளான நிலையில் மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இன்று அதிகால 1.20 மணியளவில் திருச்சியிலிருந்து 130 பயணிகளுடன் மும்பை வழியாக டுபாய் நோக்கி புறப்பட்ட ஏர் இந்திய விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குறைவான உயரத்தில் பந்தமையினால் விமானத்தின் சக்கரங்கள் விமான நிலைய சுற்றுச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தையடுத்து மும்பையில் தரையிறங்கிய விமானம் ஆய்வு செய்யப்பட்டது. விமானத்தில் சிறியளவிலான பாதிப்புகள் மட்டுமே இருந்ததாக ஆய்வுகளின் முடிவில் தெரிவிக்கப்பட்டது. இந் நிலையில் விமானத்தில் பயணித்த பயணிகள் பதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வேறொரு விமானம் மூலம் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!