யாழ். குடாநாட்டில் இரவு ரோந்து, வீதிச் சோதனை ஆரம்பம்! – 200 பொலிசார் களமிறக்கம்

யாழ். குடாநாட்டில் அதிகரித்திருக்கும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இரவு நேர விசேட தேடுதல் நடவடிக்கைகள் நேற்றிரவு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விசேட தேடுதல் மற்றும் வீதி சோதனை நடவடிக்கைகளுக்கு வடமாகாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் 200ற்கும் அதிகமான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வடமாகாணத்துக்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கட்டளையின் கீழ் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலிருந்து மேலதிக பொலிஸார் யாழ்ப்பாணத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸார் இரவுநேர வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குடாநாட்டில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!