தவறுகளை ஒப்புக்கொண்டு வாக்கு கேட்போம்! – சுமந்திரன்

கடந்த தேர்தலின் போது முன்வைத்த வாக்குறுதிகள் நிறைவேற்றுவதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விட்ட தவறுகளை, தமிழ் மக்கள் மத்தியில் துணிச்சலாகக் கூறுவோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அந்தத் தவறுகளைத் திருத்திக் கொள்வதற்காக நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலில் மற்றுமொரு வாய்ப்பைக் கேட்கவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துக் கருத்துத் தெரிவித்த அவர், சில வேளைகளில் மாகாண சபை தேர்தல் முடிவதற்கு முன்பாக அரசமைப்பு உருவாகினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எல்லாவற்றையும் வெற்றிகொண்டதாக அமையும்.

மாறாக, வெற்றிபெறாமல் அது பின்னோக்கி தள்ளப்படுமாக இருந்தால், அரசியல் தீர்வு தொடர்பில், இதுவரையில் நடைபெற்ற முன்னேற்றகரமான விடயங்களை மக்களுக்கு பகிரங்கப்படுத்தவுள்ளோம். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விட்ட தவறுகளையும் தமிழ் மக்களுக்கு தெரிவித்து, அடுத்தமுறை அவ்வாறான தவறுகளைத் திருத்திக் கொள்ளவுள்ளதாக, அவர் மேலும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!