பாலுணர்வுடன் பார்த்தால் உள்ளுணர்வு இரும்பாக மாறும்: – தமிழிசை சவுந்தரராஜன்

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மத்திய அரசின் நலத்திட்டம் குறித்த விளக்கம் கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மத்திய அரசின் எரிவாயு, சாலை, வங்கி கடன் உள்பட பல திட்டங்களை விளக்கி பேசினார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மத்திய அரசின் நலத்திட்டம் குறித்த விளக்கம் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மத்திய அரசின் எரிவாயு, சாலை, வங்கி கடன் உள்பட பல திட்டங்களை விளக்கி பேசினார்.

பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பிரதமர் மோடி மக்கள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருப்பதால் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். சபரிமலைக்கு 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் செல்லக்கூடாது என்று போராடி வரும் சபரிமலை பக்தர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம். தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள்.

பெண்களை கரும்பு மாதிரி நினைப்பவர்களுக்கு எதிராக தான் மீடூ அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. பெண்களை பாலுணர்வுடன் பார்த்தால், அவர்கள் உள்ளுணர்வு இரும்பாக மாறும். இரும்பு கரம் கொண்டு அடக்குவார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு பாரதிய ஜனதா மகளிரணி துணை நிற்கும். மத்திய அரசு தமிழக மீனவர்கள் மீது எப்போதும் அக்கறை கொண்டுள்ளது. மீனவர்கள் விவகாரத்தில் குற்றம்சாட்டி வரும் எதிர்கட்சியினர் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் இலங்கை தமிழக மீனவர்களுக்கு எதிராக கொண்டு வந்துள்ள சட்டத்தை சட்டத்தின் வழியாக எதிர்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கண்டிப்பாக பாரதிய ஜனதா கட்சி காலூன்றும். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!