பாகிஸ்தான் கடற்பரப்பிற்குள் அத்துமீறிய 16 மீனவர்கள் கைது

பாகிஸ்தான் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 16 பேரை கைதுசெய்துள்ளதாக பாகிஸ்தான் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த 16 மீனவர்கள் பயணித்த மூன்று படகுகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் பாகிஸ்தானிய கடற்படையினர் தெரிவித்துள்ளதுடன் கராச்சி துறைமுகம் பகுதியில் உள்ள காவல் நிலைய பொலிஸார் கைதான மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!