சிறிலங்காவின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதை அடுத்து, அலரி மாளிகையில் ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசர கூட்டம் ஒன்றை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐதேக தலைவரும், கூட்டு அரசின் பிரதமருமான, ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்று வருகிறது.
இதில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். அதேவேளை, ஐதேக அமைச்சர்கள் பலரும், மகிந்த ராஜபக்சவின் நியமனம் சட்டரீதியானது அல்ல என்றும், அரசியலமைப்புக்கு முரணானது என்றும்,கூறியுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்குபற்றுவதாக, அமைச்சர் மனோ கணேசன் கீச்சகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!