பட்டாசு கட்டுப்பாடுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள் – பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

பட்டாசு வெடிப்பது 90 சதவீதம் குழந்தைகள், மாணவர்கள் தான். பட்டாசு கட்டுப்பாடுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.

மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கூறியதாவது:-

பண்டிகைகள் சிதைக்கப்படுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பட்டாசு வெடிப்பது 90 சதவீதம் குழந்தைகள், மாணவர்கள். இவர்களை என்ன செய்ய போகிறார்கள்?

சட்டத்தை புகுத்த போகிறார்களா? ஒவ்வொரு வீட்டுக்கும் போலீஸ், தெருவுக்கு ஒரு டீம் போட போகிறார்களா? இது மக்கள் விழா சந்தோச விழா.

அடுத்து கிறிஸ்துமஸ் விழா வரப்போகிறது. அப்போதும் பட்டாசு வெடிக்கக்கூடாது. ஆடு, மாடு வெட்டக்கூடாது என்பார்களா?

மக்கள் கூடி கொண்டாடும் சந்தோச விழாக்கள். சந்தோசமாக நடக்கட்டுமே. பாதிப்புகள் இருந்தால் அதை தீர்க்க என்ன வழி என்று யோசிப்பது தான் புத்திசாலித்தனம்.

இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!