நாமல் குமாரவுக்கு இடமில்லை – கைவிரித்தது ‘மொட்டு’ கட்சி

மைத்திரிபால சிறிசேன, கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டோரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக தகவல்களை வெளியிட்ட, நாமல் குமாரவை நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்தும் திட்டம் ஏதும் கிடையாது என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தாம் பொதுஜன முன்னணியில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக நாமல் குமார இன்று செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் கூறியிருந்தார்.

இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், நாமல் குமாரவை தாம் போட்டியில் நிறுத்துவது குறித்து முடிவு ஏதும் எடுக்கவில்லை என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி கூறியுள்ளது.

“யார் எதுவும் சொல்லலாம், எமது கட்சியின் வேட்பாளர்கள் யார் என்பதை, எமது வேட்பாளர் தெரிவுக் கழுவே முடிவு செய்யும். நாமல் குமாரவை போட்டியில் நிறுத்துவது குறித்து நாங்கள் ஆலோசிக்கவேயில்லை. ” என்றும் என்றும் பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!