அமைப்பாளர்களுடனான சந்திப்பை இடைநிறுத்தினார் மைத்திரி

சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுடன் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று மாலை நடத்தவிருந்த கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

இன்று மாலை 5 மணியளவில் இந்தக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எனினும், எப்போது என்று நாள் குறிக்கப்படாமல் இந்தக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

இன்று மாலை அமைச்சரவைக் கூட்டத்துக்கு சிறிலங்கா அதிபர் தலைமை தாங்கவுள்ளதாலேயே இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார்.

எனினும், நீதிமன்ற உத்தரவு குறித்து எதிர்பார்க்கப்படுவதாலேயே சிறிலங்கா அதிபர் இந்தக் கூட்டத்தை ஒத்திவைத்திருப்பதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!