தனுஷ்கோடிக்கு சுற்றுலா செல்ல தடை

கடலூர் பாம்பன் இடையே காஜா புயல் கரையை கடக்கும் போது தனுஷ்கோடி கடல் வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.இன்று மாலை 5 மணி முதல் தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

இத்தடையால் தனுஸ்கோடி செல்லும் சுற்றுலா வாகனங்கள் வேர்கோடு பகுதியுடன் நிறுத்தப்படும்,இத்தடையானது மறு உத்தரவு வரும் வரை நீடிக்கும் என மெரைன் போலிஸார் அறிவிப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!