ரணிலை மீண்டும் பிரதமராக்குவதே தீர்வுக்கு ஒரே வழி! – ஜெனிவா மாநாட்டில் கருத்து

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக கொண்ட அரசாங்கத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதே இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வாக அமையும் என்று ஜெனிவாவில் நடந்த விவாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நேற்று விவாதம் ஒன்று நடைபெற்றது.

‘மனித உரிமைகள் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை பாதுகாப்பதில் இலங்கை நாடாளுமன்ற வகிபாகம்’ எனும் தலைப்பில் ஆரம்பமான மாநாட்டில் மாற்றுக்கொள்கைகளுக்கான ஆய்வு நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் “தற்போதைய இலங்கை அரசியல் நெருக்கடிக்கு தீர்வு ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக கொண்ட அரசாங்கத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதுடன், பொது தேர்தல் ஒன்று செல்வதாகும்.

அத்தோடு தற்போதைய அரசியல் சாசன நெருக்கடியானது வலிந்து காணாமல் ஆக்கப்படுத்தல், சுய தணிக்கை, நீதிக்கு புறம்பான கொலைகள் போன்ற கடந்த காலத்தில் பரவலாக காணப்பட்ட கலாச்சாரத்திற்கு வழிகோலும் வகையில் இந்த நெருக்கடி நிலை காணப்படுகின்றது” என மாற்றுக்கொள்கைகளுக்கான ஆய்வு நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்றும் இந்த விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!