பாராளுமன்றில் அடாவடி : பிரசன்ன ரணவீர கைது செய்யுமாறு பொலிசில் முறைப்பாடு

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர கடந்த 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பொலிஸ் அதிகாரிகளை தாக்கி, மிளகாய் பொடி தூவி அவர்களின் சேவைக்கு இடையூறு ஏற்படுத்தியது மாத்திரமன்றி பொது சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்திருந்தார்.

ஆகவே பிரசன்ன ரணவீர பொது சொத்து சட்ட மூலம் மற்றும் தண்டனை சட்டக்கோவைக்கு அமைவாக குற்றம் செய்தவராவார். இது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரசன்ன ரணவீரவின் நடவடிக்கைகளை உள்ளுராட்சிமன்ற மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் கண்டிப்பதாகவும் பிரசன்ன ரணவீர தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிககப்பட வேண்டுமென்றும் புறக்கோட்டை மாநகரசபை உறுப்பினர் அஷ்வினி சந்துருவனி வலியுறுத்தினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!