காதலி வேலைக்கு செல்வதை பொறுத்துக்கொள்ள முடியாத காதலன் எடுத்த விபரீத முடிவு!

உத்திரபிரதேச மாநிலத்தில் காதலி வேலைக்கு செல்வதை பொறுத்துக்கொள்ள முடியாத காதலன், கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் அனில் விஹார் பகுதியை சேர்ந்த 22 வயதான ரவி யாதவ் என்ற இளைஞர், நொய்டா பகுதியில் உள்ள உணவகத்தில் டெலிவரி பையனாக இருந்துவந்தார்.

கடந்த ஒரு மாதமாக வேலையில்லாமல் இருந்த ரவி, நேற்று காலை தன்னுடைய காதலியை சந்திக்க சென்றுள்ளார். அங்கு காதலி புதிதாக ஒரு வேலையில் சேர்ந்திருப்பதை கேள்விப்பட்டு சண்டையிட்டுள்ளார். பின்னர் கோபமாக வீடு திரும்பிய ரவி, வழியிலேயே தன்னுடைய கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்டு, ரத்தம் வழிந்தபடியே வீட்டிற்கு வந்துள்ளார்.

காலை 9 மணிக்கு தூங்கிகொண்டிருந்த தன்னுடைய தந்தை ராஜூவை எழுப்பி, “சென்று வருகிறேன் அப்பா” என கூறிவிட்டு மயக்கமடைந்து விழுந்தார். கழுத்து முழுவதும் ரத்தத்துடன் மகன் மயங்கிவிழுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜு, உடனடியாக பக்கத்துக்கு வீட்டாரின் உதவியுடன் ரவியை மீட்டு மருத்துவனையில் சேர்த்தார். இதற்கிடையில் பதறியபடி வீட்டிற்கு ஓடிவந்த காதலி நடந்தவை பற்றி ரவியின் தந்தையிடம் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், ரவி தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. புகார் கொடுத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!