இலங்கையில் வாழும் சிங்கள மக்கள் நல்லவர்கள். அவர்கள் இன, மத வேறுபாடுகள் பார்ப்பதில்லை. அதனாலேயே சிங்களப் பிரதேசத்தில் முஸ்லிமான நான் பிரதிநிதியாக உள்ளேன். இவ்வாறு நல்லிணக்க இராஜங்க அமைச்சர் எச்.எம். பௌசி தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த நாட்டில் வாழும் சிங்கள மக்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் இன, மத வேறுபாடுகளைப் பார்ப்பத்தில்லை. அதனாலேயே சிங்கள பிரதேசத்தில் வாழும் நான் அவர்களின் இனத்தைச் சேர்ந்த பலருடன் போட்டியிட்ட போது அங்குள்ள மக்கள் எனக்கு அதிக வாக்கினை வழங்கி என்னை தமது பிரதிநிதியாக தெரிவு செய்துள்ளனர்.
அவர்கள் இன, மத பேதம் பார்த்திருந்தால் நான் உங்கள் முன்னிலையில் வந்திருக்க மாட்டேன். ஆனால் ஒரு சில குழப்பவாதிகள் சிறிய பிரச்சனைகளை பூதாகரமாக்கி குழப்பங் களை ஏற்படுத்த முயல்கின்றனர் -– என்றார்
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!