பலித்தது 40 ஆண்டுகளுக்கு முன் கூறிய ஆரூடம்!

நிறைவேற்று அதிகார ஆசனத்தில் பைத்தியக்காரன் ஒருவன் அமர்ந்தால் நிலைமை என்னவாகும் என அன்று என்.எம்.பெரேரா எழுப்பிய கேள்விக்கு நாற்பது ஆண்டுகளின் பின்னர் மைத்திரிபால சிறிசேன பதில் கொடுத்துவிட்டார். புத்தகங்களில் அறிந்துகொள்ள முடியாத விடயத்தை கடந்த 50 நாட்களில் அனுபவம் மூலமாக மக்கள் உணர்ந்துவிட்டனர் என ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ, தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் சபை ஒத்திவைப்புவேளையில் முன்வைத்து உரையாற்றியபோது அவர் கூறுகையில்,

நிறைவேற்று அதிகாரத்தை வைத்துக்கொண்டு கடந்த சில நாட்களாக நிறைவேற்று அதிகாரி எவ்வாறு செயற்பட்டார், மக்கள் ஆணையை எவ்வாறு எட்டியுதைத்து தன்னிச்சையாக செயற்பட்டார் என அவதானிக்க முடிந்தது. கடந்த சில நாட்களாக அவர் நடந்துகொண்ட விதம் எவ்வாறு என்பது அறிய முடிந்தது. கடந்த 50 நாட்களாக நாட்டின் ஜனநாயகத்திற்கும் , மக்கள் ஆணைக்கு அமைய ஜனாதிபதி செயற்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனை அடுத்து இனியும் நிறைவேற்று அதிகாரம் அவசியமாக என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்டவரப்பட்டபோது ” இந்த ஆசனத்தில் பைத்தியக்காரன் அமர்ந்தால் என்ன ஆகும் “என என்.எம்.பெரேரா ஒருமுறை ஒருமுறை கேட்டாராம். ஆனால் அப்போது எம்மால் அதனை உணர முடியவில்லை. ஆனால் இன்று மைத்திரிபால சிறிசேன அதனை நிருபித்து விட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே மஹிந்த ராஜபக் ஷவை தாக்கியுள்ளார். இப்போதாவது இவற்றை அனைவரும் விளங்கிக்கொள்ளுங்கள். 20 ஆம் திருத்தத்தில் மாற்றுத் திருத்தங்கள் எதனையும் செய்ய வேண்டும் என்றால் அதனை செய்வோம். வாக்கியங்களில் குறைகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்வோம், ஆனால் நிறைவேற்று முறைமையினை தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!