சம்­பந்­த­னின்றி ஐ.தே.க இல்லை அவ­ரும் யானை மீது ஏறி­விட்­டார்!!

சம்­பந்­தன் இல்­லா­மல் ஐக்­கிய தேசிய கட்சி இல்லை, ஐக்­கிய தேசி­யக் கட்சி இல்­லா­மல் சம்­பந்­தன் இல்லை. இது­ தான் தற்­போ­தைய நிலை. சம்­பந்­தன் யானை மீது ஏறி விட்­டார்.

இவ்­வாறு தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் தலை­வர் ஆனந்­த­சங்­கரி தெரி­வித்­தார்.

தந்தை செல்வா நினைவு தினம் தமி­ழர் விடு­தலை கூட்­டணி அலு­வ­ல­கத்­தில் நேற்று நடை­பெற்­றது. அதில் உரை­யாற்­றும்­போதே இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
பதவி ஆசை கார­ண­மா­கத் தந்தை செல்­வா­வைச் சாக­டித்­த­வர்­கள் அதி­கம். தந்தை செல்­வா­வின் பெயரை வைத்து இங்கு வியா­பா­ரம்­தான் நடக்­கின்­றது.

தந்தை செல்வா இறந்து 28 வரு­டங்­க­ளுக்­குப் பிறகு வீட்வை வைத்து இப்­போது பிழைப்பு நடத்­து­கின்­றார்­கள். அது­வும் இந்­தத் தேர்­த­லில் முடி­ய­வில்லை. தலை­வர் பத­விக்­காக தமிழ் அர­சுக் கட்சி ஈ.பி.டி கட்­சி­யு­டன் சேர்ந்து ஆட்சி அமைத்­துள்­ளது.

அது மட்­டும் அல்ல எல்லா கட்­சி­யு­டன் கூட்டு சேர்ந்­தது. வவு­னி­யா­வில் தமிழ் அர­சுக் கட்­சிக்­குப் போட வேண்­டாம் என்­றேன், அவ்­வ­ளவு தான்.

இப்­போது சம்­பந்­தர் யானை மீறி எறி­யுள்­ளார். யு.என்.பி இல்­லா­மல் சம்­பந்­தர் இல்லை, சம்­பந்­தர் இல்­லா­மல் யு.என்.பி இல்லை அந்­த­நி­லை­தான் தற்­போ­துள்­ளது. ஆனால் நான் யானை மீறி ஏறி விட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது – என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!