சம்பந்தன் இல்லாமல் ஐக்கிய தேசிய கட்சி இல்லை, ஐக்கிய தேசியக் கட்சி இல்லாமல் சம்பந்தன் இல்லை. இது தான் தற்போதைய நிலை. சம்பந்தன் யானை மீது ஏறி விட்டார்.
இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
தந்தை செல்வா நினைவு தினம் தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
பதவி ஆசை காரணமாகத் தந்தை செல்வாவைச் சாகடித்தவர்கள் அதிகம். தந்தை செல்வாவின் பெயரை வைத்து இங்கு வியாபாரம்தான் நடக்கின்றது.
தந்தை செல்வா இறந்து 28 வருடங்களுக்குப் பிறகு வீட்வை வைத்து இப்போது பிழைப்பு நடத்துகின்றார்கள். அதுவும் இந்தத் தேர்தலில் முடியவில்லை. தலைவர் பதவிக்காக தமிழ் அரசுக் கட்சி ஈ.பி.டி கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளது.
அது மட்டும் அல்ல எல்லா கட்சியுடன் கூட்டு சேர்ந்தது. வவுனியாவில் தமிழ் அரசுக் கட்சிக்குப் போட வேண்டாம் என்றேன், அவ்வளவு தான்.
இப்போது சம்பந்தர் யானை மீறி எறியுள்ளார். யு.என்.பி இல்லாமல் சம்பந்தர் இல்லை, சம்பந்தர் இல்லாமல் யு.என்.பி இல்லை அந்தநிலைதான் தற்போதுள்ளது. ஆனால் நான் யானை மீறி ஏறி விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது – என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!