“வடக்கில் நடைபெறும் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளின் போராட்டங்களின் பின்னணியில் அரச சார்பற்ற நிறுவனங்கள் பொதுமக்களைத் தவறாக வழிநடத்துகின்றன”
இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார்.
லண்டன் பி.பி.சி சிங்கள சேவைக்கு வழங்கிய கருத்துப் பரிமாறல் நிகழ்வில் அவர் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“போரின் போது இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட காணிகளில் 80 வீதமானவை தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன. புதுவருடத்தை முன்னிட்டு 500 ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டது. ஆனால் அதுபற்றி யாரும் பேசிக்கொள்ளவில்லை. சிலர் தமது சுய இலாபத்துக்காகக் கருத்துக்களை வெளியிடுகின்றனர். நாட்டைப் பிரிக்கும் எந்தவொரு செயற்பாட்டையும் அனுமதிக்கப் போவதில்லை. அவர்களுடன் பேச்சு நடத்தமாட்டேன். விடுதலைப் புலி உறுப்பினர்களால் பல முறை லண்டனில் எனக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. என்றாலும் தமிழீழம் அமைவது சாத்தியமற்றது” என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!