அரசியல் கைதியான சுதாகரன் உட்படப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்டநாள்களாகச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் விடுவிப்புத் தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வுடன் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் விரைவில் சந்தித்துப் பேசவுள்ளனர் என்று கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பணத்தில் நேற்றுச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனை தெரிவித்தார்.அவர் அங்கு தெரிவித்தாவது,
அரசியல் கைதிகள் விடுதலை சம்பந்தமாக நாம் அரசுக்கு பல அழுத்தங்களை கொடுத்து வருகின்றோம்.
அரச தலைவர் நீண்டநாள்களாகச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை தமிழ் அரசியல் கைதிகள் எனக் கூறுவதில்லை.பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் என்றே அவர் கூறுவார். மேலும் அவ்வாறு தடுத்து வைகக்பட்டுள்ளவர்களைப் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யத் தாம் நடவடிக்கை எடுப்பார் என்றும் எனக்கு கூறியுள்ளார்.
ஆகவே தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரன் உட்பட நீண்ட நாள்களாகச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக எமக்கும் அரச தலைவருக்கும் இடையில் மிக விரைவில் இடம்பெறவுள்ள கட்டம் கட்டமான பேச்சுக்களின் போது பேசவுள்ளோம் -என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!