கொலையாளியின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

திருமணப் பரிசில் வெடிகுண்டு அனுப்பி மணமகனைக் கொலை செய்த கொலையாளியின் திடுக்கிடும் வாக்குமூலத்தால் பொலிஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்திய மாநிலம் ஒடிசாவில் திருமண பரிசாக வெடிகுண்டு அனுப்பிய விவகாரத்தில் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் மணமகன் கொல்லப்பட்டுள்ளதுடன் மணப்பெண் படுகாயமடைந்தார்.

கைது செய்யப்பட்ட கல்லூரி ஆசிரியர் கொல்லப்பட்ட மணமகனின் தாயாருடன் ஒன்றாகப் பணிபுரிந்து வந்ததாகவும், தமக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வை கொல்லப்பட்ட மணமகனின் தாயாருக்கு நிர்வாகம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கொலையாளி திட்டமிட்டு பழிக்கு பழி வாங்கியதாகவும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இணையத்தில் இருந்து வெடிகுண்டு தயாரிக்கும் முறையை தெரிந்து கொண்ட அவர், தனது வீட்டிலேயே வெடிகுண்டு பார்சலை தயார் செய்துள்ளார். பின்னர் சுமார் 230 கிலோ மீற்றர் தொலைவு தொடருந்துப் பயணம் செய்து அங்கிருந்து வெடிகுண்டு பார்சலை மணமகனின் பெயருக்கு அனுப்பியுள்ளார்.

குறித்த பார்சலானது 3 பேருந்துகளில் மாறி மாறி பயணம் செய்து இறுதியில் மணமகனிடம் வந்து சேர்ந்துள்ளது. திருமணத்தன்று மாலை மணமகளுடன் இணைந்து பார்சலை திறந்து பார்த்த மணமகன் சம்பவிடத்திலேயே உயிரிழந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!