வடக்கு ஆளுநராக கூரேயே நீடிப்பார் – ஜனாதிபதி தெரிவித்ததாக தகவல் கசிவு

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என அறிய முடிகிறது.

மேல் மாகாணஆளுநர் கே.சி.லோகேஸ்வரன் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் றெஜினோல்ட் கூரேயே நீடிப்பார் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

எட்டு மாகாணங்களின் ஆளுநர்களுக்கு, விருப்ப அடிப்படையில், இடமாற்றங்களை வழங்க அரசு திட்டமிட்டது.

இந்த மாற்றங்களுக்கமைய, மேல் மாகாண ஆளுநர், கே.சி.லோகேஸ்வரன், வட மாகாண ஆளுநராக மாற்றம் பெற விருப்பம் தெரிவி த்திருந்தார்.

இந்த நிலையில் 9 மாகாணங்களின் ஆளுநர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் சந்தித்தார்.

இதன்போது வடக்கு மாகாண ஆளுநராக றெஜினோல்ட் கூரே நீடிப்பார் என உறுதிப்ப டுத்தப்பட்டது என அறிய முடிகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!