எனக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மகிந்த அணி முதலில் நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரட்டும். அதன் பின்னர் எனது பதிலை -– தக்க பதிலடியை அப்போது சொல்வேன். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்றுள்ள சூழலில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் முன்வைக்க மகிந்த அணி தீர்மானித்துள்ளது.
முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் கூட்டு எதிரணியினர் இது தொடர்பில் கொழும்பில் நேற்று முன்தினம் கூடி ஆராய்ந்துள்ளனர்.
இது தொடர்பில் எதிர்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் ‘உதயன் பத்திரிகை’ கேள்வி எழுப்பியது.
‘மகிந்த அணியினர் எனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முதலில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரட்டும். சபாநாயகரிடம் அவர்கள் அதனைச் சமர்பித்த பின்னர் அவர்களுக்கு தக்க பதிலை நான் கூறுவேன். அதுவரை நான் பொறுமையாக இருப்பேன். மேலதிக கருத்துக்களைக் கூறவிரும்பவில்லை’ என்று பதிலளித்தார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!