காங்கிரசை குறைத்து மதிப்பிட வேண்டாம்: ராகுல் ஆவேசம்!

காங்கிரஸ் கட்சியை குறைத்து மதிப்பிட வேண்டாமென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை தோல்வியடையச் செய்ய சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் உத்தரபிரதேசத்தில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கின்றன. இதற்காக (சனிக்கிழமை) அகிலேஷ் யாதவும், மாயாவதியும் சந்தித்து முக்கிய முடிவை அறிவிக்கவுள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ”உத்தரபிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு எங்கள் திறமையை வெளிப்படுத்துவோம். இந்த தேர்தலில் எதிர்பாராத அதிர்ச்சியை அளிப்போம். காங்கிரஸ் கட்சியை குறைத்து மதிப்பிட வேண்டாம். அப்படி மதிப்பிட்டால் அது தவறான முடிவாகத் தான் இருக்கும்” எனக் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!