தாயின் உடலை தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்..!

ஒடிசா மாநிலம் சுண்டர்கர் மாவட்டம் கர்பாபகல் கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் ஒருவர் உயிரிழந்த தனது தாயின் உடலை, மகன் சைக்கிளில் கொண்டு சென்று காட்டுக்குள் அடக்கம் செய்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

ஒடிசா மாநிலம் சுண்டர்கர் மாவட்டம் கர்பாபகல் கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயதான ஜானகி சின்ஹானியா சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருடைய கணவர் இறந்துவிட்டார்.

இந்நிலையில் அவருடைய 17 வயது மகன் சரோஜ் மற்றும் மகளுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் நேற்று முன் தினம், தண்ணீர் எடுக்கச் சென்ற ஜானகி தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்நிலையில் இறுதிச் சடங்கு செய்ய அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் உதவி கேட்டார் சரோஜ். ஆனால், ஜானகியின் குடும்பம் தாழ்ந்த ஜாதி என்பதால் யாரும் உதவ முன்வரவில்லை. இதனால் மனம் தளர்ந்துவிடாத சரோஜ், தனது தாயின் உடலை சைக்கிளின் கொண்டுசென்று அடக்கம் செய்ய தீர்மானித்தார்.

இதையடுத்து, இரண்டு கம்புகளை, சைக்கிளின் இரு பக்கமும் பொருத்தி, அதன்மீது மரக்கட்டைகளை கட்டி அதில் தனது தாயின் உடலை கிடத்தினார்.

பின்னர், நான்கைந்து கிலோ மீற்றர் தூரம் சைக்கிளை தள்ளியபடியே உடலை சுடுகாட்டுக்கு கொண்டு சென்றார். பிறகு, யாருடைய உதவியும் இன்றி தனி ஆளாக அவரை அடக்கம் செய்துவிட்டு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!