கடைசி வரை மகிந்தவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி தான்! – மனோ கணேசன்

கடைசி வரை மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராகவே இருப்பார். அவர் ஒருபோதும் இனிமேல் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ ஆகமாட்டார் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு விஜயரட்ணம் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“அண்மையில் ஒரு சிலர் எமது அரசாங்கத்தினை திருட்டு வழியில் கைப்பற்றியிருந்தார்கள். அவர்கள் அனைவரும் திருடர்கள். அவர்களால் ஏற்படுத்தப்பட்டதும் திருட்டு அமைச்சரவையே. இந்நிலையில் நாம் சட்டத்தின் துணைகொண்டு நீதிமன்றத்தின் மூலம் மக்களின் ஆதரவுடன் அந்த திருட்டு அரசாங்கத்தினைச் சேர்ந்தவர்களை விரட்டியடித்தோம்.மக்கள் வாக்களித்து உருவாக்கிய இந்த நல்லாட்சி அரசாங்கத்தினை காப்பாற்ற வேண்டியது எமது பொறுப்பு. அத்துடன் மக்கள் எம்மைத் தெரிவு செய்ததன் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டியதும் அரசியல்வாதிகளான எமது பொறுப்பு” என கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!