மின்சார சபைக்கு ஒரு கோடி ரூபா செலுத்த வேண்டிய நிலையில் ஈபிடிபி!

ஈ.பி.டி.பியின் யாழ்ப்­பாண அலு­வ­ல­க­ம் இயங்­கும் சிறி­தர் தியேட்­டர் மற்­றும் ஊடக நிறு­வ­னங்­கள் இயங்­கிய கட்­ட­டங்­கள் என்­ப­வற்­றில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணமாக ஒரு கோடி ரூபா­வுக்­கும் அதி­கமாகச் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக மின்­சா­ர­சபை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

சிறி­தர் தியேட்­ட­ருக்கு 1998ஆம் ஆண்­டி­லி­ருந்து மின்­சா­ரம் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. இது­வரை 85 லட்­சத்து 50 ஆயி­ரத்து 982 ரூபா 75 சதம் மின்­சார சபைக்­குச் செலுத்­தப்­ப­ட ­வேண்­டி­யுள்­ளது. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றம் ஏற்­ப­டும் வரையே மின்­சார சபைக்கு பணம் செலுத்­தப்­ப­ட­வில்லை. அதன் பின்­னர் ஒவ்­வொரு மாத­மும் பணம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

இதே­போன்று, யாழ்ப்­பா­ணம் நவீன சந்­தைக் கட்­ட­டத்­தில் இயங்­கிய அலு­வ­ல­கம், பஸ்­தி­யன் சந்­தி­யில் இயங்­கிய அலு­வ­ல­கம், யாழ்ப்­பாண நக­ரில் காங்­சேன்­துறை வீதி­யில் இயங்­கிய அலு­வ­ல­கம் ஆகி­ய­வற்­றுக்­கும் மின்­சார விநி­யோ­கம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. அதற்­கு­ரிய நிலு­வைப் பண­மும் செலுத்­தப்­ப­ட­வில்லை.

ஈ.பி.டி.பியி­ன­ரி­டம் நீண்ட கால­மாக நிலு­வைப் பணம் அற­வி­டப்­ப­டா­த­மையை உறுதி செய்த இலங்கை மின்­சார சபை­யி­னர் மேல­திக தக­வல்­களை வெளி­யிட மறுத்­துள்­ள­னர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!