அரசியலமைப்பு யோசனையை தோற்கடிக்காவிட்டால் ஆபத்து! – கோத்தா எச்சரிக்கை

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “எனினும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பிற்கான யோசனையில் இணங்கக்கூடிய விடயங்கள் எதுவும் இல்லை. இந்த யோசனையை எப்படியாவது தோல்வியடைய செய்ய வேண்டும். இதனை தோல்வியடைய செய்யவில்லை என்றால் அது நாட்டிற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆனாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஒன்று வழங்கப்பட வேண்டும் என்ற கருத்திலேயே நானும் உள்ளேன். தமிழ் மக்களை ஈடு வைத்துவிட்டு நாட்டை நடத்திச் செல்வதற்கு இடமளிக்க கூடாது“ என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!