சிறைச்சாலைகளுக்குள் இருந்தே தொடரும் போதைப்பொருள் வியாபாராம் – இல்லாமலாக்க நடவடிக்கை

சிறைச்சாலைக்குள் இருந்தே போதைப்பொருள் கடத்தல் வியாபாரம் இடம்பெற்று வருகின்றது. அதனை இல்லாமலாக்குவதற்கு நாங்கள் எடுத்த வேலைத்திட்டம் அரசியல் சூழ்ச்சி காரணமாக தடைப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் ஆரம்பித்துளோம் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

வெலிமட பிரதேசத்தில் புதிய நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு அடிக்கல்நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இன்று சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் கடத்தல் வியாபாரங்களை மேற்கொள்ள சிறைக்காவலர்களுக்கு சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. நேற்று வெலிக்கடை சிறைக்காவலாளி ஒருவர் சிறைச்சாலைக்குள் ஹெராேயின் கொண்டு செல்லும்போது பிடிபட்டுள்ளார். அரசியல்வாதிகள் என்றவகையில் எந்தவேளையும் இந்த பதவிகள் எங்களுக்கு இல்லாமல்போகலாம். ஆனாலும் இருக்கும் காலத்தில் நாட்டுக்காக நல்ல விடயங்களை மேற்கொள்ளவேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!