“புதிய அரசியலமைப்பு நாட்டு மக்களின் கழுத்திற்கு போடப்படுகின்ற தூக்குக்கயிறு”

சுமந்திரன், சம்பந்தன் உள்ளிட்டோர் நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பைத் தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். காரணம் இந்த அரசாங்கத்திலேயே இத்தகையதொரு மோசமான விளைவுகளை ஏற்படுத்தத்தக்க அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றார்கள். புதிய அரசியலமைப்பு என்பது எமது நாட்டு மக்களின் கழுத்திற்கு போடப்படுகின்ற இறுதித் தூக்குக்கயிறாகும் என வியத்மக அமைப்பைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியும், திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளருமான ராஜகுணரத்ன தெரிவித்தார்.

கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான ‘வியத்மக” அமைப்பினால் இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள வியத்மக அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!