வேட்பாளர் பட்டியலில் கோத்தாவே முன்னணியில் இருக்கிறாராம்!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவே முன்னிலை பெற்றுள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ‘ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒன்பது மாதங்கள் உள்ளன. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பொருத்தமான நேரத்தில் பொதுவேட்பாளர் குறித்த அறிவிப்பினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிடுவார். இந்த பட்டியலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபயராஜபக்ஷவே முன்னிலை பெற்றுள்ளார். அதுவே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகவும் காணப்படுகின்றது. அவர் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பல தடவைகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒருவர்” என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!