மனைவி, மகளை கொன்ற நபர் கைது!

மும்பையில் மனைவி மற்றும் மகளை கொலை செய்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மும்பை தாராவி கமலா நகர், டைமண்ட் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இலியாஸ் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 34 வயமதன மனைவி தாகசின் ஐஹ்ரா மற்றும் மகள் அலியாவை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

குறித்த சம்பவத்துடன் இலியாஸின் இளம் காதலி ஆப்ரின் பானு உடந்தையாக இருந்த நிலையில், இருவரையும் கொலை செய்து எரித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து இலியாஸ் செயத் மற்றும் ஆப்ரின் பானுவை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இலியாஸ் செயத் வழங்கிய வாக்கு மூலத்தில், எனது இளைய மகள் அலியாவால் எனக்கு கெட்ட நேரம் வந்தது அவள் பிறந்ததில் இருந்து எனக்கு எல்லாவற்றிலும் நஷ்டம் தான் ஏற்பட்டது.

எனவே தான் அவளை மட்டும் கொலை செய்யாமல், எனது மனைவியையும் சேர்த்து கொலை செய்தேன். பின்னர் எனது மூத்த மகள் மற்றும் காதலி ஆப்ரினுடன் வாழ முடிவு செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

நான் ஆப்ரின் பானுவை திருமணம் செய்துவிட்டு மூத்த மகளுடன் வாழ விரும்பினேன் என குறித்த நபர் பொலிஸ் விசாரணையின் போது மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!