தமிழர்கள் மனத்தில் ராஜபக்ச இடம்பிடித்திருக்கிறாராம்! – இந்தியாவில் ‘கதை அளந்த’ நாமல்.

மகிந்த ராஜ­பக்­சவை வடக்கு, கிழக்கு தமிழ் மக்­க­ளுக்கு மிக­வும் பிடிக்­கும். அவர்­க­ளின் மன­தில் எனது தந்தை தொடர்ந்தும் நிலைத்­தி­ருக்­கின்­றார் என்று எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்­வின் மூத்த புதல்­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நாமல் ராஜ­பக்ச தெரிவித்துள்ளார். மகிந்த ராஜ­பக்சவுடன் இந்தியா சென்றிருந்த நாமல் ராஜ­பக்­ச­ அங்கு ஊட­கங்­க­ளுக்­குக் கருத்­துத் தெரி­வித்­த­ போதே இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.

‘ராஜ­பக்ச குடும்­பத்­துக்கு வடக்கு, கிழக்­கில் தனி மரி­யாதை உண்டு. விடு­த­லைப் ­பு­லி­க­ளைத் தோற்­க­டித்து உயி­ருக்­குப் போரா­டிக்­ கொண்­டி­ருந்த தமிழ் மக்­களை நாம் மீட்­டெ­டுத்­தோம். அதை தமிழ் மக்­கள் மறக்­க­மாட்­டார்­கள். வடக்­கில் புலி­க­ளின் தலை­ந­க­ராக விளங்­கிய கிளி­நொச்சி மாவட்­டத்­தில் எமக்­கான ஆத­ரவு பெரு­ம­ள­வில் இருக்­கின்­றது. போரால் சின்­னா­பின்­ன­மாக்­கப்­பட்ட கிளி­நொச்சி மாவட்­டம் உட்­பட வடக்கு, கிழக்­கில் உள்ள அனைத்து மாவட்­டங்­க­ளும் ராஜ­பக்­ச­வின் ஆட்­சி­யின் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்­டது. ஆனால் தற்­போ­தைய ஆட்­சி­யின்­போது அந்த மாவட்­டங்­கள் புறக்­க­ணிக்­கப்­ப­டு­கின்­றன.

அண்­மை­யில் கிளி­நொச்­சிக்கு நான் சென்­ற­போது அங்­குள்ள மக்­கள் வேத­னை­யு­டன் அதைத் தெரி­வித்­தார்­கள். வெள்ள இட­ரால் அண்­மை­யில் பாதிக்­கப்­பட்ட கிளி­நொச்சி மற்­றும் முல்­லைத்­தீவு மாவட்ட மக்­க­ளுக்கு எம்­மா­லான உத­வி­களை நாம் வழங்­கி­னோம்.வடக்கு, கிழக்கு தமிழ் மக்­கள் மீண்­டும் ஒரு போரை விரும்­ப­வில்லை. அவர்­க­ளின் மன­தில் நாம் என்­றும் உத்­தம புரு­ஷர்­க­ளாக இருக்­கின்­றோம். ஆனால், தமி­ழ­கம் உள்­ளிட்ட வெளி­நா­டு­க­ளில் உயிர் தப்பி சுக­போக வாழ்க்கை வாழும் புலி­கள் அமைப்­பி­ன­ருக்கு நாம் போர்க்­குற்­ற­வா­ளி­க­ளா­கத் தெரி­கின்­றோம் என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!