ஜனாதிபதி வேட்பாளரை தன்னிச்சையாக தீர்மானிக்கும் உரிமை பசிலுக்கு கிடையாது:நாணயக்கார

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தன்னிச்சையான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கு கிடையாது.

பொதுஜன பெரமுன தனித்த ஒரு கட்சி அல்ல பல்வே று கட்சிகள் ஒன்றினைக்கப்பட்டுள்ளது. ஆகவே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பசில் ராஜபக்ஷவின் கருத்து எதிர் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரானது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் அல்லாத ஒருவர் ஜனாதிபதியாகுவதற்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்காது என்றும், ஜனாதிபதி வேட்பாளர் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் என்று அக்கட்சியின் உறுப்பினர் ஸ்தாபகர் குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் ஜனநாயக இடதுசாரி முண்ணயிடம் வினவிய பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!