வவுனியாவில் இருந்து கொழும்பு சென்ற பஸ் கோர விபத்து! – 4 பேர் பலி, 19 பேர் படுகாயம்

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் அதிகாலை 4.30 மணியளவில், மாரவில – மஹவெவ சந்தியில் வீதியை விட்டு விலகி மின்கம்பம் ஒன்றில் மோதியதில் நால்வர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்த நிலையில், மாரவில மற்றும் சிலாபம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் காயமடைந்த 19 பேரில் 16 ஆண்களும் 3 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தை அடுத்து பலத்த சேதமடைந்திருந்த பஸ்ஸினுள் சிக்கியிருந்த பயணிகளை பிரதேச மக்கள் பலத்த சிரமத்தின் மத்தியில் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களுள் புத்தளம் இராணுவ முகாமிலிருந்து விடுமுறை பெற்று தமது வீடுகளுக்குச் சென்று கொண்டிருந்த நான்கு இராணுவத்தினரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் இதுவரையில் இனம்காணப்படவில்லை எனத் மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!