ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான இறுதி முடிவு இன்று ; தூத்துக்குடியில் 2 ஆயிரம் பொலிஸார் குவிப்பு

இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான இறுதி திர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், தூத்துக்குடியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப் பகுதியில் சுமாமர் 2 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச் சூழல் மற்றும் உடல் பாதிப்பு ஏற்படுவதாக கூறி அதனை மூடுவதற்கு வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

கடந்த மே 22 திகதி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது அவர்கள் மீது துப்பாக்கிச் சூடும், தடியடியும் நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தார்கள்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. நிலைமை தீவிரம் அடைந்த சூழலில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதையடுத்து, ஆலை மூடப்பட்டது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்து. இதில் ஆலையை திறக்க அனுமதி கிடைத்தது.

இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதேபோன்று தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்து.

இருதரப்பு வாதங்களும் நிறைவுற்ற நிலையில் தீர்ப்பு திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை திறக்க தடை என்று தீர்ப்பு வெளியானால் பிரச்னை பெரிதாக ஏற்படாது.

ஆனால் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் தூத்துக்குடியில் சுமார் 2 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!