கென்யாவில் கன மழை – 100 பேர் உயிரிழப்பு!!

கென்யாவில் ஏற்பட்ட கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி, இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர் என்று செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.

ஆபிரிக்க நாடான கென்யாவில், கனமழை பெய்து வருகிறது. வட கென்யாவில், தாழ்வான இடங்கள் வெள்ளக்காடாக உள்ளன.

வெள்ளத்தில் சிக்கி இதுவரை, 100 பேர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தொடர் மழையால் கொலரா உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாதிப்புகளில் இருந்து மீள, பன்னாடுகள் நாடுகள் உதவ வேண்டுமென, கென்ய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!