போதைப்பொருள் வியாபாரத்தில் வடக்கு அரசியல்வாதிகள், வர்த்தகர்கள்! – குற்றம்சாட்டுகிறார் ரஞ்சன்

போரால் பாதிக்­கப்­பட்ட அப்­பாவி மக்­கள் வடக்கு மாகா­ணத்­தில் போதைப்­பொ­ருளை விற்­பனை செய்­ய­வில்லை. வடக்­கில் அர­சி­யல் தரப்­புக்­க­ளும், உயர்­மட்ட வர்த்­த­கர்­க­ளும் தான் அதன் பின்­ன­ணி­யில் இருக்­கின்­றார்­கள் என்று இவ்­வாறு இரா­ஜாங்க அமைச்­சர் ரஞ்­சன் ராம­நா­யக்க தெரி­வித்­தார்.

அமைச்­சர்­கள், பிரதி அமைச்­சர்­கள் உள்­ளிட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கொக்­கெய்ன் போதைப் பொருள் பயன்­ப­டுத்­து­வ­தா­கத் தெரி­வித்து சர்­சை­யில் மாட்­டி­யுள்ள ரஞ்­சன் ராம­நா­யக்க மேற்­படி இந்தத் தக­வலை வெளி­யிட்­டுள்­ளார். கொழும்பு ஊட­கத்­துக்கு வழங்­கிய நேர்­கா­ண­லி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.

‘நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் போதைப் பொருள் வியா­பா­ரத்­தில் இருப்­ப­வர்­கள், பின்­ன­ணி­யில் இருப்­ப­வர்­கள், பயன்­ப­டுத்­து­ப­வர்­கள் எனப்­ப­லர் பற்­றிய தக­வல்­கள் உள்­ளன. தற்­போ­தைக்கு 24பேரின் ஆத­ரங்­க­ளு­ட­னான தக­வல்­கள் உள்­ளன. ஒரு விட­யத்தை வேண்­டு­மென்­றால் என்­னால் கூற­மு­டி­யும். போதைப்­பொ­ருள் பயன்­ப­டுத்­தும் அர­சி­யல்­வா­தி­க­ளில் தமிழ் பேசு­ப­வர்­க­ளும் இருக்­கின்­றார்­கள். அதற்­கான சான்­று­க­ளும் என்­னி­டத்­தில் உள்­ளன’ என்று குறிப்­பிட்­டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!