போரால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் வடக்கு மாகாணத்தில் போதைப்பொருளை விற்பனை செய்யவில்லை. வடக்கில் அரசியல் தரப்புக்களும், உயர்மட்ட வர்த்தகர்களும் தான் அதன் பின்னணியில் இருக்கின்றார்கள் என்று இவ்வாறு இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொக்கெய்ன் போதைப் பொருள் பயன்படுத்துவதாகத் தெரிவித்து சர்சையில் மாட்டியுள்ள ரஞ்சன் ராமநாயக்க மேற்படி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். கொழும்பு ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
‘நாடாளுமன்ற உறுப்பினர்களின் போதைப் பொருள் வியாபாரத்தில் இருப்பவர்கள், பின்னணியில் இருப்பவர்கள், பயன்படுத்துபவர்கள் எனப்பலர் பற்றிய தகவல்கள் உள்ளன. தற்போதைக்கு 24பேரின் ஆதரங்களுடனான தகவல்கள் உள்ளன. ஒரு விடயத்தை வேண்டுமென்றால் என்னால் கூறமுடியும். போதைப்பொருள் பயன்படுத்தும் அரசியல்வாதிகளில் தமிழ் பேசுபவர்களும் இருக்கின்றார்கள். அதற்கான சான்றுகளும் என்னிடத்தில் உள்ளன’ என்று குறிப்பிட்டார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!