காணாமல் ஆக்கப்பட்டோர், காணிகள் விடுவிப்பு குறித்த மனுக்கள் ஐ.நா பிரதிநிதியிடம் கையளிப்பு!

காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கேப்பாப்புலவு காணி விடுவிப்பு சம்பந்தமான மகஜர்களை ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதியிடம் உலகத்தமிழ் மாணவர் ஒன்றிய அமைப்பாளர் கந்தசாமி ராகுலன் கையளித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதியை கொழும்பில் நேற்று சந்தித்த உலகத்தமிழ் மாணவர் ஒன்றிய அமைப்பாளர் கந்தசாமி ராகுலன் மற்றும் அவரது குழுவினர் ஐ.நா. தொண்டர் அமைப்பின் ஊடாக காணாமலாக்கப்பட்டோருக்கான மற்றும் கேப்பாப்புலவு காணி விடுவிப்பு சம்பந்தமான மகஜர்களை கையளித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!