தலை­வர் பிர­பா­க­ரன் இறந்­து ­விட்­டார்- தமிழ்க் காங்­கி­ரஸ் தலை­வர் அறி­விப்பு!!

தம்பி பிர­பா­க­ரன் இப்­போது இறந்து விட்­டார். அவர் விட்­டுச் சென்ற கொள்­கை­களைக் கடைப்­பி­டித்து வரு­கின்ற எமது மாம­னி­தர் குமார் பொன்­னம்­ப­லத்­தின் மகன் கஜேந்­தி­ர­கு­மார் தலை­மை­யில் எமது இனம் ஒன்­று­பட்­டுத் திரண்டு போரா­டு­வ­தன் மூலம்­தான் எமது இழந்த உரி­மை­களை பெற்­றெ­டுக்க முடி­யும். இவ்­வாறு அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர் ஆனந்­த­ராசா தெரி­வித்­தார்.

தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் (அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ்) ஏற்­பாட்­டில் தொழி­லா­ளர் தினக் கூட்­டம் கிட்­டுப் பூங்­கா­வில் நேற்று முன்­தி­னம் இடம்­பெற்­றது. இதன்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

இந்த நிகழ்­வில் உரை­யாற்­றிய தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் உறுப்­பி­ன­ரான சட்­டத்­த­ரணி க.சுகாஸ், காலம் சில தலை­வர்­களை இனம் காட்­டும். 1940ஆம் ஆண்­டு­க­ளில் இனங்­காட்­டிய தலை­வன்­தான் ஜி.ஜி.பொன்­னம்­ப­லம். அதற்­குப் பின்­னர் காலம் தந்தை செல்­வ­நா­ய­கம் என்ற தலை­வனை இனம்­காட்­டி­யது.

அதற்க்­குப் பின்­னர் இரண்டு தலை­வர்­களை காட்­டிய காலம் அதற்கு பின்­னர் தமிழ் தேசி­யத்­துக்கு தலைமை தாங்­கு­வ­தற்கு ஒரு கட­வு­ளைக் காட்­டி­யது. அது தான் தேசி­யத் தலை­வர் மேதகு வேலுப்­பிள்ளை பிரா­ப­க­ரன். அந்த இறை­வ­னுக்­குப் பின்­னர் கடந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­தல், காலம் காட்­டிய தலை­வன்­தான் மாம­னி­த­னு­டைய புதல்­வன் அண்­ணன் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம்.

இவர்­தான் தமிழ்த் தேசத்­தின் கடை­சித் தலை­வன். இந்த தேசத்தை மீட்க இந்­தத் தலை­வனை நாம் தவற விடு­மே­யா­னால் தமிழ்த் தேசம் சிங்­கள தேச­மா­கும். சிங்­க­ளத்­தின் கனவு நன­வா­கும். ஒரு நாடு ஒரு தேசம் என்­பது நிரூ­பிக்­கப்­ப­டும்.அதை தடுக்க வேண்­டு­மாக இருந்­தால் தமி­ழர் தாய­கத்தை மீட்க வேண்­டு­மாக இருந்­தால் எமது அபி­லா­சை­கள் கிடைக்க வேண்­டும் என்­றால் கேட்டு கேள்வி இல்­லா­மல் இந்­தத் தலை­வ­னின் பின்­னால் தமிழ் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் பின்­னால் அணி திரள்­வ­து­தான் நாம் செய்­யும் கடப்­பாடு – என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!