புழுதிப் புயலில் சிக்கி – 74 பேர் உயிரிழப்பு!!

ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட கடும் புழுதிப்புயல் மற்றும் இடியுடன் கூடிய மழை காரணமாக 74 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர் என்று இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

கடும் புழுதிப்புயல் காரணமாக மரங்கள் மின்கம்பங்களின் மீது முறிந்து வீழ்ந்துள்ளன. ராஜஸ்தானின் பல பகுதிகளில் மின்துண்டிப்பும் ஏற்பட்டுள்ளது.
பாரத்பூர் பகுதியிலேயே அதிகளவு உயிரிழப்புக்கள் சம்பவித்துள்ளன.

நிவாரணப் பணிகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளளனர் என்று ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!