பெரும்பான்மையின அரசியல் கட்சிகள் தமிழர் தாயகப் பகுதிகளில் காலூன்றுவதில் அதிக அக்கறை காட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது.
நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் இந்தக் கட்சிகள் கடந்த காலங்களை விட அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொண்டமையை ஓர் அபாய அறிவிப்பாகவே கருத வேண்டியுள்ளது.
முஸ்லிம் மக்களது தனிப்பெரும் கட்சியாக உருவான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
சிறுபான்மை மக்களின் ஒரு பிரிவினரான முஸ்லிம் மக்கள், நீண்ட காலமாகவே பெரும்பான்மையினக் கட்சிகளுடன் உறவைப்பேணி வருகின்றனர். இந்த மக்களுக்கென மறைந்த தலைவர் அஷ்ரப்பினால் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் கிழக்கில் உள்ள முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவு இந்தக்கட்சிக்குக் கிட்டியிருந்தது. பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் ஆதரவும் இந்தக் கட்சிக்குக் கிடைத்தது.
பேரினவாதிகள் ஆரம்பத்தில் இதை எதிர்க்கவே செய்தனர். முஸ்லிம்களின் மத்தியில் அவர்களுக்கெனத் தனியானதொரு கட்சி உருவாவதை அவர்கள் விரும்ப வில்லை. இதனால் தமது கட்சிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டு விடும் என்பதே அதற்கான காரணமாகும்.
சில முஸ்லிம் தரப்பிலிருந்தும் இதற்கு எதி।ர்ப்புக் கிளம்பியது. மத்தியில் தாம் வகித்து வருகின்ற பதவிகளுக்கு ஆபத்து வந்து விடுவோமென்ற அச்சமே இவர்களது அந்த எதிர்ப்புக்கான காரணமாகும். ஆனால், அஷ்ரப் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது கட்சியைக் கட்டியெழுப்பினார். முஸ்லிம் மக்களின் மிகப்பெரிய அரசியல் சக்தியாக அதை உருவாக்கினார்.
அஷ்ரப்பின் மறைவுக்குப் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் பல பிரிவுகளாகப் பிளவடைந்தது. இதனால் முஸ்லிம் மக்களும் தமது ஒற்றுமையை இழக்க நேரிட்டது. இதனால் பெரும் தேர்தல்கள் இடம் பெறும்போது பெரும் பான்மையினக் கட்சிகளுடனும், சிறுபான்மையினக் கட்சிகளுடனும் கூட்டுச்சேர்ந்து அந்தக் கட்சிகளின் சின்னத்தி்ல் போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தத்தை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கொள்ள வேண்டி நேரிட்டது.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் வடக்குக் கிழக்கில் எந்தவொரு தமிழ்க்கட்சிகளுக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கொள்கையில் வேறு பட்ட கட்சிகள் இணைந்து செயலாற்ற வேண்டிய துரதிர்ஷ்டமான நிலை உருவானது. வடக்கில் ஈ.பி.டி.பி.யின் ஆதரவுடன் ஆட்சியமைக்க வேண்டிய அவலமான நிலைக்கு கூட்டமைப்பு தள்ளப்பட்டது.
ஈ.பி.டி.பி.யுடன் உறவு பேணும் கூட்டமைப்பின் போக்கால் அதிருப்தி அடைந்துள்ள கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர்கள்
ஈ.பி.டி.பி எப்போதுமே பேரினவாதக் கட்சிகளுடன் இணைந்து செயலாற்றுவதையே தனது கொள்கையாகக் கொண்டது. புலிகள் வீழ்ச்சி யடைந்தபோது அதிகமாக மகிழ்ச்சியடைந்தவர்கள் இந்தக் கட்சியினர்தான்.
இந்த நிலையில் கூட்டமைப்பு இவர்களுடன் உறவுகளைப்பேணி வருவதை அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாலேயே ஜீரணிக்க முடிய வில்லை. ஈபிடிபியுடன் இணைய முடியுமானால் எம்முடன்இணைவதற்கு கூட்ட மைப்புக்கு என்ன தயக்கமெனக் கேள்வி எழுப்பிய கருணா, கிழக்கில் பிரதேசசபை யொன்றில் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கி ஆட்சியமைக்க உதவியமை குறிப்பிட த்தக்க அம்சமாகும்.
வவுனி।யா வடக்கில் மகிந்தவின் கட்சியும், கரவெட்டியில் சுதந்திரக்கட்சியும் ஆட்சியை அமைப்பதற்கான வாய்ப்புக் காணப்பட்டதால் , அதை முறியடிக்கும் வகையில் கூட்டமைப்பு அங்கு ஆட்சியமைப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவளிக்குமென செய்திகள் அடிபட்டன. ஆனால் அதற்கான தேவை எழவில்லை.
வடக்கில் பெரும்பான்மையின மக்களைக் குடியேற்றுகின்ற முயற்சிகள் அரசின் ஆதரவுடன் இடம்பெற்று வருகின்றன. இதன் காரணமாக எதிர்காலத்தில் இடம்பெற விருக்கும் தேர்தல்களில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்படப்போவதை இப்போதே உணர முடிகிறது.
பதவிகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் பெரும்பான்மையினக் கட்சிகளிடம் விலைபோகும் தமிழர்கள்
பதவிகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் சில தமிழர்கள் பெரும்பான்மையினக் கட்சிகளுக்கு முண்டு கொடுக்கப் பின்நிற்கப்போவதில்லை. பேரினவாதக் கட்சிகள் தமது நோக்கம் நிறைவேறியவுடன் சிறு பான்மை மக்களைத் திரும்பி யும் பார்க்க மாட்டா என்பதை கடந்த கால வரலாறுகள் எடுத்துக் கூறுகின்றன.
தமிழ்த் தலைவர்கள் தமக்குள் முரண்படுவதை விடுத்து ஏற்படப் போகின்ற அபாயத்தை எதிர்கொள்வதற்குத் தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண் டும். தமக்குள் முரண்படுவதால் அந்நிய சக்திகள் பலமடைந்து விடுமென்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையாகச் செயற்படுவதன் மூலமே பேரினவாதம் எழுச்சியுறுவதையும், தமிழ்த் தேசியம் வீழ்ச்சியுறுவதையும் தடுக்க முடியும்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!