.”ஆளும் தரப்பினருக்கும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் தொடர்புள்ளது”

ஆளும் தரப்பினருக்கும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் தொடர்புள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

போதைப்பொருள் தொடர்பில் இந்த அரசாங்கத்தின் உறுப்பினர்களே தொடர்ந்து விமர்சிக்கப்பட்டனர். கடந்த காலங்களில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்த குற்றச்சாட்டு தற்போது வரவு செலவு திட்டம் வரையில் எவ்விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது.

தற்போது வரவு செலவு திட்டம் காரணமாக இவ்விசகாரம் முழுமையாக மூடி மறைக்கப்பட்டு விடும்.

பாதாள குழுவினருடன் அரசியல் இரகசிய தன்மைகளை பேணும் நாட்டின் பிரபல்யமான கட்சியுடன் போதைப்பொருள் வியாபாரிகள் மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான நல்லதொரு ஆதாரம் தற்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினரும் போதைப்பொருள் வியாபாரிகளுடன் நேரடியாக தொடர்புகளை கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!